Friday, December 30, 2011

நன்றி 2011.... நல்வரவு 2012...

2011 விடைபெறும் கடைசி தினம் இன்று.  2012 க்கான நல்வாழ்த்துக்கள்.  ஒவ்வொரு நொடியும் நாம் கற்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணத்தையும், கற்பதற்கான வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு, உங்கள் பார்வையை மாற்றிப் பாருங்கள், நல்லவை அழகாகவும், அல்லவை அனுபவமாகவும் தோன்றும். Arnold Fox & Barry Fox எழுதியுள்ள "The Miracle of Positive Thinking" என்ற புத்தகத்தில், ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். உலகில் நல்ல அனுபவம், கெட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. வெறும் அனுபவம் தான்.  நல்லதாகவோ, கெட்டதாகவோ அந்த அனுபவம் மாறுவதற்கு, நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது.  2012 ல் நமக்கு ஏற்படும் எல்லா அனுபவத்தையும் நல்லதாகவே எதிர்கொள்வோமே.

புத்தாண்டின் பொழுதில் இந்த பாடலை கேளுங்கள்.  நாளைய பொழுது நல் பொழுதாக நம் எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.  ஜேசுதாசின் அந்த கணீர் குரலும், இசைஞானியின் தாலாட்டும் இசையும், வாலியின் எளிமையான வார்த்தைகளும் நம் நெஞ்சை தொட்டு ஒரு புத்துணர்வை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment