Friday, December 30, 2011

நன்றி 2011.... நல்வரவு 2012...

2011 விடைபெறும் கடைசி தினம் இன்று.  2012 க்கான நல்வாழ்த்துக்கள்.  ஒவ்வொரு நொடியும் நாம் கற்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணத்தையும், கற்பதற்கான வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு, உங்கள் பார்வையை மாற்றிப் பாருங்கள், நல்லவை அழகாகவும், அல்லவை அனுபவமாகவும் தோன்றும். Arnold Fox & Barry Fox எழுதியுள்ள "The Miracle of Positive Thinking" என்ற புத்தகத்தில், ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். உலகில் நல்ல அனுபவம், கெட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. வெறும் அனுபவம் தான்.  நல்லதாகவோ, கெட்டதாகவோ அந்த அனுபவம் மாறுவதற்கு, நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது.  2012 ல் நமக்கு ஏற்படும் எல்லா அனுபவத்தையும் நல்லதாகவே எதிர்கொள்வோமே.

புத்தாண்டின் பொழுதில் இந்த பாடலை கேளுங்கள்.  நாளைய பொழுது நல் பொழுதாக நம் எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.  ஜேசுதாசின் அந்த கணீர் குரலும், இசைஞானியின் தாலாட்டும் இசையும், வாலியின் எளிமையான வார்த்தைகளும் நம் நெஞ்சை தொட்டு ஒரு புத்துணர்வை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Thursday, December 15, 2011

நினைவுகளை தாலாட்டும் சில பெண் குரல் பாடல்கள்

சில பாடல்கள் காலம் கடந்தும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.  அதிலும் எனக்கு சில பெண் குரல் பாடல்கள் மீது தீரா காதலே உண்டு.  இந்த பாடல்கள் அனைத்தும் பல்வேறு சூழலில் பாடுவது போல் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு மென் சோகம் இருப்பது இழையோடுவது போலவே இருக்கும்.  அது தான் அந்த பாடல்களின் அழகோ என்று கூட எனக்கு தோன்றும்.

காலை பணியில் ஆடும் மலர்கள்


'காயத்ரி' படத்தில், இசைஞானியின் இசையில், சுஜாதா பாடும் இந்த பாடல் ஒரு கிளாசிக்.  "காயம் பட்ட மாயம்" என்று சுஜாதா ஏக்கத்தோடு பாடும் வரியில் நிஜமாகவே அந்த மென்சோகம் தெரியம்.



புத்தம் புது ஓலை வரும்

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.  இன்றும் கணிசமான மக்கள், இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் மண்ணுக்குள் வைரம் திரை படத்தின் மூலம் அறிமுகமான தேவேந்திரன் இந்த படத்தில் எல்லாப் பாடல்களையும் பட்டை கிளப்பி இருப்பார். சித்ராவின் குரலில் "புத்தம் புது ஓலை வரும்" என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த வயலின் பிட்டிலேயே, கதாநாயகியின் மனதை அழகாய் வெளிப்படுத்திவிடுவார்.  அதன் பிறகு வரும் அந்த புல்லாங்குழல் ஒரு ஹைக்கூ. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி, காதலனுக்காக காத்திருந்து பாடும் இந்த பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இருக்கும்.


மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே

நண்டு படத்தில் வரும் இந்த பாடலை நான் எங்கே கேட்டாலும், நின்று கேட்டுவிட்டு தான் போவேன்.   சிவசங்கரியின் கதையை மகேந்திரன் இயக்கி இருப்பார்.  அருமையான கதைகள் எல்லாம் படமாய் வெளி வந்த காலம் அது.  இந்த பாடலில் உமா ரமணன் குரலை கேட்கும் போதெல்லாம் எனக்குள் சிலிர்க்கும்.  சில நாள் என்னை அறியாமல் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தியிருகிறேன். அமைதியான இரவில் இந்த பாடலை கேளுங்கள்.  உங்கள்  தாயின் தாலாட்டாய் இது இருக்கும். இசைஞானியின் இந்த பாடல் ஒரு மயிலிறகின் வருடல்.



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


'குழந்தையும் தெய்வமும்' படத்தில், MSV இசையில்,  P சுசீலா அவர்கள் பாடும் இந்த பாடல் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு பாடல்.  ரொம்ப வருடத்துக்கு முன் டிவியில் ஏதோ ஒரு பாடல் போட்டியில் ஒரு 7 வயது பெண் குழந்தை இந்த பாட்டை பாடியது.  அன்றிலிருந்து இந்த பாடல் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.  பாடல் வரிகள் ஏதோ அறிவுரை போல தோன்றினாலும், பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இழைந்து இருக்கும்.  இரட்டை வேடத்தில் குட்டி பத்மினி க்யூட். நேற்றும் இந்த பாடலை நெஞ்சு நெகிழ கேட்டேன். சுசீலாம்மா நீங்க ஒரு Legend .  இந்த பாடலை கேளுங்கள், பெண் குழந்தைகள் மீது உங்களுக்கு இன்னும் அன்பு கூடும்.



ராசாவே உன்னை நம்பி

இது நிஜமாகவே ஒரு மென் சோகப் பாடல்.  ஜானகியின் குரலில் துவங்கும் ஆலாபனையிலேயே பெண்ணின் ஏக்கம் சோகமாய் காற்றில் கலக்கும்.  கிராமத்து பெண்ணின் மனச்சுமையை மிக நெகிழ்வாக பாடலாய்  வெளிப்படுத்தி இருப்பார் இசைஞானி. புல்லாங்குழலில் புல்லரிக்க வைப்பார்.  இளையராஜாவை விட்டு பிரிந்ததும், பாரதிராஜாவின் உள்ளத்தை பிரதிபலிப்பது போலக் கூட இந்த பாடல் எனக்கு தோன்றும். இந்த பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் தான் இருப்பதால் இந்த பாடல் வெறும் ஆடியோ தான்.  ஆனால் என்ன இளையராஜாவை பார்த்துக்கொண்டே இந்த பாடலை கேளுங்கள், பாடல் முடிந்ததும் இசைஞானி உங்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாவார். "பழச மறக்கலையே பாவி பய நெஞ்சு துடிக்குது" .....ஹூம்... அந்த பாரதிராஜா எங்கே போனார்?


Saturday, December 10, 2011

பரதநாட்டியம் கத்துக்க போன கமல் ரசிகர்


நம்ம கமல் ரசிகர் ஒரு பயங்கர கமல் வெறியர்.  ஆளு வேற கொஞ்சம் கலரா, நல்ல பாடியோட வேற இருப்பாரு. கமல் பட அறிவிப்பு வெளியான உடனே, கமல் அந்த கேரக்டர்ல வாழறாரோ இல்லையோ நம்ம ஆளு அந்த கமல் கேரக்டர் மாதிரியே வாழ ஆரம்பிச்சுடுவாரு.  உதாரணத்துக்கு வாழ்வே மாயம் வந்த உடனே, கமல் மாதிரியே ரவுண்ட் நெக் T ஷர்ட் எல்லாம் வாங்கி வச்சுட்டாரு.  அது மட்டும் இல்லை, கமல் கடைசியிலே அந்த படத்துல குர்தாவோட தான் இருப்பாரு இல்லையா, அதனால நம்ம ஆளும் குர்த்தா எல்லாம் போட்டுக்கிட்டு தான் கொஞ்ச நாளு திரிஞ்சாரு. ஆனா அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை கமல் மாதிரியே தாடி வெக்க முடியலே.  ஏன்னா நம்ம ஆளுக்கு தாடி மட்டும் ஆட்டு தாடி மாதிரி தான் இருந்தது. அதுல அவருக்கு ரொம்பவே வருத்தம். சரி இந்த டிரஸ் அலப்பறை தான் தொலையுது அப்படீன்னா, பேச்சு, நடக்கறது, பாக்கறது எல்லாமே கமல் மாதிரியே பண்ணி அதகளம் பண்ணுவாரு.  இன்னும் கொஞ்சம் மேல போய், கமலுக்கு படத்துல பிரண்ட்ஸ் வருவாங்க பாருங்க, அதே மாதிரியே எங்களையும் ட்ரீட் பண்ணுவாரு.  அவரு கமல்னா நாங்க எல்லாம் அவருக்கு அல்லக்கைங்களாம் .

இப்படிப்பட்ட ரசிகர் இருக்கும் போது, எங்களை பத்தி எல்லாம் நினைச்சு பார்க்காம கமல் 'சலங்கை ஒலி' படம் எடுத்துட்டாரு. அந்த படத்தை கமலுக்காவே ஒரு ஆறு தடவை, அப்புறம் நம்ம கமல் ரசிகருக்காகவே இன்னொரு ஆறு தடவை பார்த்தேன். படம் வந்த நாள்ல இருந்து சூன்யம் வச்ச சூனா தானா மாதிரியே நம்ம ஆளு திரிஞ்சிக்கிட்டு இருந்தாரு.  எப்போ அவரு வீட்டுக்கு போனாலும் கையை வச்சு அபிநயம் எல்லாம் பிடிச்சிக்கிட்டு இருப்பாரு.  எங்களுக்கு கொஞ்சம் திகிலாவே இருந்தது.

ஒரு நாளு ரொம்ப சீரியஸா, "நான் பரதம் கத்துக்க போறேன்" அப்படீன்னாரு. எங்களுக்கு கமலை நினைச்சு கோவப் படறதா, பரதத்தை நினைச்சு வருத்தப் படறதா, எங்களை நினைச்சு நொந்துக்கறதான்னு தெரியலே.  அப்படி, இப்படீன்னு தேடி ஒரு பரத நாட்டிய டீச்சரையும் கண்டு பிடிச்சாரு.  அவங்க அப்பத்தான் கல்யாணமான ஒரு இளம் பெண்.  கிடா மாதிரி வளர்ந்து இருக்குற நம்ம ஆளுக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுக்கறதுக்கு அவங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.  நம்ம கமல் ரசிகரும் நாட்டியம் மட்டுமே வாழ்க்கையினுடைய உயிர் மூச்சா எடுத்துக்கிட்டு கத்துக்கணும்னு கிளம்பிட்டாரு.  எங்களையும் கம்பெனிக்கு கத்துக்க வாங்கடான்னு எவ்வளவோ கேட்டு பார்த்தாரு.  பரதம் மேல எங்களுக்கு ரொம்ப மரியாதையும், எங்க மேல எங்களுக்கே அவ்வளவு நல்ல அபிப்ராயமும் இல்லாததாலே நாங்களும் எஸ்கேப், பரத நாட்டியமும் தப்பிச்சுது.  ஆனா எங்க நட்பு வட்டத்துக்கு வெளியே இருந்து ஒரு பலியாடு வந்து மாட்டிகிச்சு.

அவரும் ஒரு கமல் ரசிகர்.  நம்ம ஆளு ஏத்தி விட்ட ஏத்துல அவரும் களத்துல குதிக்க ரெடி ஆயிட்டாரு. ரெண்டு பேரும் போய் கமல் போட்டு இருந்த மாதிரியே வெள்ளை கலர்ல குர்தா எல்லாம் தைச்சுக்கிட்டு வந்தாங்க.  அதை போட்டுக்கிட்டு ரெண்டு பெரும் கிளாசுக்கு சைக்கிள்ளே டபுள்ஸ் போற அழகே அழகு.  கமலுக்கு சலங்கை ஒலியில சரத் பாபு மாதிரி நம்ம புது நண்பர் நம்ம ஆளுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டாரு.

ஒரு நாளு நம்ம ஆளு வீட்டுல பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நாங்க எல்லாரும் தான் ஆடியன்ஸ். அப்போ பார்த்து அவங்க மாமா காளஹஸ்தியில இருந்து நம்ம ஆளு வீட்டுக்கு வந்தாரு.  அவங்க பெண்ணை அவரு நம்ம ஆளுக்கு தான் கல்யாணம் கட்டி குடுக்கணும்னு பிளான்ல இருந்தாரு.  நம்ம ஆளு அவங்க மாமா உள்ள வர நேரம் பார்த்து சலங்கை ஒலியில கமல் கல்யாண மண்டபத்துல ஆடுற "பால கணக மய" பாட்டை அப்படியே கமல் மாதிரியே தன்னை மனசுல நினைச்சுக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தாரு.  மாமா கதவை தொறந்துக்கிட்டு உள்ள வர்ற நேரம் பார்த்து காசட்ல ஜானகியம்மா, "ரா ரா...ரா ரா..." அப்படீன்னு உருகி உருகி பாடுற லைன்.  நம்ம ஆளு அதுக்கு கரெக்டா கதவை பார்த்து அபிநயம் பிடிக்கிறாரு.  உள்ள வந்த மாமாவை பார்த்து "ரா..  ரா.." (தெலுங்குல 'வாடா...')  அப்படீன்னு கூப்பிடுற மாதிரியே இருந்துச்சி.  மாமா அப்படியே ஆப் ஆயி, மருமகனுக்கு என்ன ஆச்சோ தெரியலயேன்னு முழிக்கிறாரு.  மாமாவை பார்த்ததும் நம்ம ஆளும், டர் ஆயி, அப்படியே ஸ்டில் ஆயிட்டாரு.  கொஞ்ச நேரம் ஒரு இனம் புரியாத அமைதி. நாங்களும் நைசா வெளிய வந்துட்டோம்.

வெளிய வந்ததும் நம்ம NP சொல்றாரு, "அவங்க மாமா அவரு பொண்ணுக்கு வேற பைய்யன பார்பாருன்னு தான் எனக்கு தோணுது" அப்படீன்றான்.

ஆனா நல்ல காலம் சலங்கை ஒலிக்கு அப்புறம் கமல் வேற படங்கள் நடிச்சதால, நம்ம ஆளும் கேரக்டரை மாத்திக்கிட்டாறு, நாங்களும் தப்பிச்சோம், பரத நாட்டியமும் பொழைச்சுது, அவங்க மாமாவும் அவரு பெண்ணையே நம்ம ஆளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாரு.

ஆனா ஒண்ணுங்க, அந்த பாட்டு ஒரு எவர் கிரீன் கிளாசிக்.  இளையராஜாவின் இசையும், கமலும், மஞ்சு பார்கவியும் ஆடுறதும், ஜெயப்ரதா ஒளிஞ்சு இருந்து கமலை போட்டோ பிடிக்கறதும், அவங்க அம்மா அப்பாவியா உக்காந்து பார்குறதும், அடேங்கப்பா... கே விஸ்வநாத் திரையில காவியம் படைச்சு இருப்பாரு.  ஏன் கமலுக்கு வெறி பிடிச்ச ரசிகர்கள் இருக்காங்க அப்படீன்றதுக்கு இந்த பாட்டு ஒரு சோறு பதம்.  நீங்களும் ஒரு தடவை அந்த பாட்டை பாருங்க, கமலை உங்களுக்கு இன்னும் பிடிக்கும்.


Tuesday, December 6, 2011

நம்மூர் பட அபத்தங்கள்!



நம்ம ஊர்ல எடுக்குற படங்கள்ல சில அபத்தக் காட்சிகளை பார்த்துட்டு, இன்னும் எப்போதாண்டா திருந்தப் போறோம்னு தோணும்உங்களுக்கும் பல முறை அப்படி தோணி இருக்கும்எனக்கு பளிச்சுன்னு பட்ட பத்து அபத்தங்கள்.

1 . காமெடின்னு நினைச்சுக்கிட்டு, காலேஜுல பத்து வருஷமா ஒரு சீனியர் பெயில் ஆயி அதே வகுப்புல படிச்சிக்கிட்டு இருக்காருன்னு காட்டுவாங்க.  ‘சச்சின்’ல வடிவேலு மாதிரிபத்தாவது பெயில் ஆனாலே, திரும்ப பள்ளிகூடத்துக்கு போக முடியாது, இதுல காலேஜுல பெயிலாயி அங்கேயே படிக்கிறாங்களாம்பாக்குற நாம தான் முட்டாளா, இல்ல எடுத்த டைரக்டரு தான்  ..........?

2 . 10 செகண்ட் 0 - 60 KMPH speed எடுக்குற கார்ல, வில்லனோட ஆளுங்க, காலி மைதானத்துல முன்னாடி ஓடுற கதாநாயகனையும், அவன் காதலி, பிரண்ட்ஸ், குடும்பம் எல்லாரையும், 5 கிலோ மீட்டர் வரைக்கும், பிடிக்க முடியாம பின்னாடியே துரத்திக்கிட்டே போவாங்க பாருங்க, அது சரியான காமெடி.

3 . கதாநாயகனை பார்த்தவுடனே, கண்டம் துண்டமா வெட்டி போடணும்னு வெறியோட, 10 , 20  பேரோட வர்ற வில்லன், அவனை பார்த்தவுடனே வெட்டி போடாம, ஸ்கூல் பசங்க பிரேயர்ல நிக்கிற மாதிரி அசெம்பிளி ஆகி, நின்னு டயலாக் பேசுறது ஏன்னு தெரியல

4 . அதுக்கு அப்புறம் வில்லன், ஒரு பக்கம் திரும்பி கண்ணு காட்ட, அவுருடைய அடியாளு ஒருத்தர் மட்டும், ஏதோ கிரிகெட்ல, பாஸ்ட் பௌலர் ஓடி வந்து பௌலிங் பண்ணுற மாதிரி "ஏய்....."  அப்படீன்னு கத்திக்கிட்டே ஒரு 100 மீட்டர் ஓடி வருவாருஅதுவரைக்கும் காட்டுத்தனமா துரத்திக்கிட்டு ஓடி வந்த மத்த அடியாளுங்க எல்லாம் பெவிலியன்ல பேட்டிங் போக காத்துக்கிட்டு இருக்குற பேட்ஸ்மேன் மாதிரி, முதல்ல ஓடினவரு கண்டிப்பா அவுட் ஆவாரு, அப்புறம் போய்க்கலாம் ன்ர மாதிரியே நிப்பாங்க.

5 . கத்தியோட, கத்திக்கிட்டே வர்ர அடியாளை, பௌன்சர் பந்துக்கு குனியற பேட்ஸ்மேன் மாதிரியே, குனிஞ்சு, அடியாளோட வயித்துல ஒரு பன்ச் குடுப்பாரு கதாநாயகன்ஒன்னு அடியாளு அந்த ஸ்பாட்லேயே மூச்சு பேச்சு இல்லாம விழுவாரு, இல்லேன்னா சென்னையில விட்ட குத்துக்கு, அங்க இருக்குற டீ கடை, அலுமினிய பாத்திர கடை, செங்கல் சுவரு, விளம்பர  பேனரு, மீன் பாடி வண்டி எல்லாத்தையும் இடிச்சிகிட்டு, ஒடைச்சிகிட்டு,  பறந்து போய், செங்கல்பட்டுல விழுவாரு.

6 . அப்புறம் கூட மத்த அடியாளுங்க எல்லாம் ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சீங்கன்னா நீங்க தமிழ் படமே பார்த்தது இல்லைன்னு தான் அர்த்தம்அப்புறம் கூட ஒவ்வொருத்தரா தான் வரிசையில ஓடி வந்து, கதாநாயகன் விடற குத்துக்கு வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் மார்கமாக ஊருக்கு ஒவ்வொருத்தரா போய் விழுவாங்க.

7 . பத்தாங்கிளாஸ் கூட பாஸ் பண்ணாம வேலை வெட்டியே இல்லாம தறுதலையா சுத்திக்கிட்டு இருப்பாரு கதாநாயகன்அப்பா பார்த்தா ரொம்ப சாதாரணமான வேலையில தான் இருப்பாருஆனா கதாநாயகன் போடுற பேன்ட், சர்ட் எல்லாம் அடேங்கப்பா ரகமா தான் இருக்கும்வெட்டியா, பொறுக்கியா சுத்திக்கிட்டு இருக்குற நம்ம ஆளு மேல, ரிசர்வ்டா, பொறுப்பா, அழகா, பெரிய நிறுவனத்துல நல்ல வேலையில இருக்குற பொண்ணுக்கு தான் காதல் வரும்.   முன்னாடி எல்லாம் கதாநாயகன் ஏழை, ஆனா நல்லவன், பண்புள்ளவன் அப்படீன்னா காதல் வரும்ஆனா இப்பல்லாம் கொஞ்சம் டெவலப் ஆயி, பொறுக்கிங்க, பொறம்போக்குங்க மேல எல்லாம் BE படிச்ச, IT வேலையில இருக்குற பெண்களுக்கு காதல் வரும்.  ஏண்டா ஒரு அளவே இல்லையா?

8 . கதாநாயகன் பெரிய பிசினெஸ்மேனாவோ இல்லேன்னா ஹை டெக் தாதாவாகவோ இருந்துட்டாருன்னா போதும், அவருக்கும், அவரோட அல்லக்கைகளுக்கும் கண்டிப்பா கோட், சூட் தான் காஸ்ட்யூம்கதாநாயகனுக்கு எக்ஸ்ட்ராவா கருப்பு கூலிங் கிளாஸ்அவுரு ஆபீஸ் போனாலும் சரி, ஆய் போனாலும் சரி, அவுரு முன்னாடி நடக்க, அல்லக்கைங்க எல்லாம் பின்னாடி ஒரு லைன்ல தான் வரணும்எக்ஸ்ட்ரா பில்ட்-அப்புக்கு கதாநாயகன் வாயில சுருட்டும், காதுல செல்போனும் வச்சுக்கிட்டு வரணும். செல் போன் பேசறது எல்லாம் ஒரு பில்ட்-அப்புன்னு இன்னும் காட்டுறானுன்களே, கொடுமைடா சாமி.

9 . இந்தியாவுல இருக்குற மிகப் பெரிய நிறுவனம் ஒன்னுக்கு MD யா ஒரு கதாபாத்திரம் இருக்கும். அவங்க கம்பெனியில machine வேலை செய்யிற கீழ் நிலை தொழிலாளிக்கு, அவங்க ஆயா வயசுக்கு வந்துட்டாங்க, அம்மாவுக்கு பேதி, அப்பா மண்டைய போட்டுட்டாரு, அதனால ஒரு நாள் லீவ் வேணும்னா கூட நம்ம MD கிட்ட தான் போய் அழுவாங்க. MD தான் கால் மேல கால் போட்டுகிட்டோ, வாயில பைப் வச்சுக்கிட்டோ, லீவ் குடுப்பேன், குடுக்க மாட்டேன்னு சொல்வாங்க.

10 . நம்ம கதாநாயகருங்க எல்லாம் 'கருத்து கந்தசாமியா' மாறி உபதேசம் பண்ற கொடுமை இருக்கே, 'கொலைவெறி' தான். அதுவும் பொண்ணுங்களுக்கு இவனுங்க குடுக்குற அட்வைஸ், ங்கொய்யால நொய்யரிசி தான். டிரஸ்ஸை இப்படி போடக் கூடாது, ரோடுல ப்படி நடக்கக்கூடாது, ரோஸ் கலர் புடவை கட்டுனா, தலையில கனகாம்பரம் வைக்கணும்வெள்ளிகிழமையான ரெட்டை ஜடை போடணும்னுஇவனுங்க அடுக்கிக்கிட்டே போற அலப்பறைக்கு அளவே கிடையாதுஆனா இவனுங்க மட்டும் இறகு பிச்சி போட்ட கோழி மாதிரி தலையில இருந்து கால் வரைக்கும் ஒரு ஏடாகூட கெட்டப்புல படம் பூரா சுத்துவானுங்கோ.

என்ன படிச்சாச்சா? சிப்பு சிப்பா வந்தாலும், துப்பு துப்பா வந்தாலும் அதை கமெண்டுல போடுங்கோ!

Thursday, December 1, 2011

கண்ணும்! புண்ணும்!

நம்ம பாக்கியராஜ் ரசிகர் கொஞ்ச நாள் ஒரு மெடிக்கல் ஸ்டோர் ல வேலை பார்த்தாரு.  நமக்கு தான் யாராவது உருப்படியா ஏதாவது செஞ்சா குறு குறு ன்னுமே.  ஒரு நாளு நானும் Neutral Party  யும் அவுரு கடைக்கு போய் அன்னாத்தையே சினிமாவுக்கு தள்ளிக்கிட்டு போலாம்னு பிளான் பண்ணோம்.

கடை கிட்டே நம்ம NP ஒரு கஸ்டமர் சர்வீஸ் பண்ணப் போய், பாக்கியராஜ் ரசிகர் வேலைக்கு உலை வைக்கப் பார்த்தாரு.


ஒரு கிழவி கடைக்கு வந்து, "ஐயா, கண்ணு ரெண்டு நாளா ஒரே எரிச்சல். எதாவது மருந்து குடுய்யா.  அப்படியே என் பேரனுக்கு அடி பட்டு இருக்கு அதுக்கும் ஒரு ஆயின்ட்மென்ட் குடுய்யா" அப்படீன்னு கேட்டாங்க.  


நம்ம ஆளும் ரொம்ப சின்சியரா, டாக்டர் லெவலுக்கு இல்லேன்னாலும், கம்பவுண்டர் லெவலுக்கு   சில கேள்வி எல்லாம் கேட்டுட்டு, மருந்து எடுத்துட்டு வர கடைக்கு உள்ள போனாரு.  


அப்போ பார்த்து நம்ம NP ரொம்ப அக்கறையா அந்த கிழவி கிட்ட சொல்றாரு, "இதோ பாரும்மா, கண்ணு மருந்தையும், புண்ணு மருந்தையும் தனித் தனியா வச்சுக்கணும். சேர்த்து வச்சா அப்புறம் கன்பீஸ் ஆயி பெரிய பிரச்சினை ஆயிடும்" அப்படீன்னு அந்த அப்பாவி கிழவியை கலவரப் படுத்திட்டாரு.


கிழவி மிரண்டு போய், "என்னா கண்ணு சொல்ற?" அப்படீன்னு கேக்க, NP சொன்னாரு பாருங்க ஒரு வியாக்கியானம்.  அது அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி அப்படீன்னு எல்லா மருத்துவ முறையிலும் பொன் எழுத்துல பொரிச்சு வைக்கணும்.


NP சொல்றாரு "இதோ பாரும்மா, உன் கண்ணுக்கு போட வேண்டிய  மருந்தை உன் பேரன் புண்ணுக்கு போட்டா, புண்ணுக்கு ஒன்னும் ஆகாது.  ஆனா உன் பேரனோட புண்ணுக்கு போட வேண்டிய மருந்தை, உன் கண்ணுக்கு போட்டா உன் கண்ணு புண்ணு ஆயிடும். அதனாலே ஜாக்கிரதை." அப்படீன்னு சீரியஸா சொல்றாரு.

அந்த கிழவிக்கு அப்போவே, கண்ணுல தாரை தாரையா தண்ணி வருது.  அது நம்ம ஆளு சொன்னதை கேட்டு ஜெர்க் ஆனதாலையா,  இல்ல, கண்ணு வலியான்னு தெரியலே.  "இன்னாப்பா சொல்றாரு இவுரு" அப்படீன்னு பக்கத்துல ஒருத்தர் கிட்ட கேக்குது.  கிரகம் பாருங்க அவுரு தான் மெடிகல் ஷாப் ஓனரு.  எப்பவுமே நம்மளை அவரு நட்போட பார்த்ததே இல்ல.  கடைக்கு உள்ள போய் நம்ம ஆள ஒரு அதட்டலோட கூப்பிட்டாரு.  அப்பவே எங்களுக்கு சிக்னல் கிடைச்சிடுச்சி, இடத்தை காலி பண்ணனும்னு.

மறு நாளு காலையில நம்ம பாக்கியராஜ் ரசிகரை அவங்க வீட்டுல பார்க்கப் போனோம். அவங்க அப்பச்சி, எங்களை பார்த்து "ஏண்டா அவன் ஒரு மாதிரி இருக்கான்?" அப்படீன்னு கேக்கறாரு.

ஒரு யூகமா எங்களுக்கு காரணம் தெரிஞ்சாலும், "ஏண்டா?" அப்படீன்னு 'அக்கறையா' கேட்டா, அதுக்கு அவன் விரக்தியா, "வாழ்க்கை ஒரு சிறைடா. பறவை போல சுதந்திரம் வேணும்டா.  அதுங்களுக்கு எல்லாம் வேலை இருக்கா? முதலாளி இருக்காரா? இல்லை பிரண்ட்ஸ் தான் இருக்காங்களா? ஆனா அதுங்களுக்கு இருக்குற சந்தோஷம் நமக்கு இல்லைடா ."  அப்படீன்னு தத்துவம் பேசறான்.

நான் NP யை பார்க்க, அவன் கூலா அவனை பார்த்து, "விடுறா, வாழ்க்கையில இன்னும் எத்தனையோ சோதனை இருக்கு.  இதுக்கே இப்படி டர் ஆயிட்டா எப்படி" அப்படீன்றான்.

Tuesday, November 29, 2011

சூப்பர் ஸ்டார் கூட ஒரு போட்டோ!


நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் சினிமாவுல இருந்தார்.  ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஒரு நாள் அவர் எங்க எல்லாரயும், பிரசாத் ஸ்டூடியோவுல ஒரு ரஜினி பட பூஜையில கலந்துக்கறத்துக்கு ஏற்பாடு செஞ்சாருஅது ஒரு பெரிய இயக்குணருடைய படம்சினிமாவுல இருந்து பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் கலந்துக்கிட்ட ஒரு பெரிய திரையுலக விழாகமல் வருவாக, சிவாஜி வருவாக, மற்றும்  திரையுலக மக்கள் எல்லாம் வருவாக அப்படீன்னு சொன்ன உடனே ரெண்டு நாளுக்கு முன்னாலேயே தூங்காம, கொள்ளாம  சுத்தி விட்ட கோழி மாதிரி எல்லாரும் ஒரு மார்கமா கிடந்தோம். வர்ற எல்லாரோடையும், குறிப்பா ரஜினி, கமல் கூட எப்படியாவது போட்டோ எடுத்தக்கனும்னு, இரவல் காமெரா, காசெல்லாம் சேர்த்து  பிலிம் ரோல் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு, நம்ம கிட்ட கிடந்த ஒன்னு ரெண்டு செட் பேன்ட், சட்டையிலேயே எதை போட்டுக்கலாம்னு குழம்பி, சரி எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டையுமே அதுங்க கதற கதற, தோய்ச்சு, தேய்ச்சு, முதல் நாள் காலையிலேயே ஹாங்கர்ல தொங்க விட்டாச்சுஅப்புறம் நமக்கு 1 ரூபா ஷாம்பூ எல்லாம் வாங்கி வச்சாச்சு.

காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பறதுன்னு பிளான்மூணு மணிக்கெல்லாம் எழுந்து, இருட்டுல கிழவி காலை எல்லாம் மிதிச்சி, துப்பு வாங்கி, இருந்த ரெண்டு செட் டிரஸ்ல, கமலுக்கு கவுன்ட்டர் குடுக்கற மாதிரி ஒன்னை செலக்ட் பண்ணி போட்டுக்கிட்டு கிளம்பியாச்சு.   பசங்க, பொண்ணுங்கன்னு நம்ம குரூப் ஒண்ணா ஜமா சேர்ந்து பஸ்ஸை புடிச்சி 10 மணி பூஜைக்கு 8 மணிக்கெல்லாம் பிரசாத்துல நாங்க ஆஜர்.

ஒரு ரோல் போட்டோ தான் இல்லையா, அதனால எங்க குரூப்புக்குள்ள ஆளாளுக்கு, எத்தனை போட்டோன்னு ஒரு சின்ன ஒப்பந்தம் வேறநம்ம ரஜினி ரசிகரும், கமல் ரசிகர் ஒருத்தரும் அவங்க அவங்க தலைவர்களோட கண்டிப்பா சோலோ ரெண்டு அப்படீன்னு வேற பிக்ஸ் பண்ணிக்கிட்டாங்கநம்ம பொண்ணுங்க பாவம், இவனுங்களோட வீட்டுக்கு போய் சேர்ற வரைக்கும் நமக்கு ராகு காலம் தான்னு கொஞ்சம் கலவரத்தோடேயே இருந்தாங்கஎங்களுக்கு ரெண்டு குரூப் போட்டோ மட்டும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு அமைதி ஆயிட்டாங்கவேற வழி.

ஒம்போதரை மணிக்கு மேல ஒவ்வொரு நட்சத்திரமா வராங்கரம்யா கிருஷ்ணனை திடீர்னு அவ்வளவு கிட்டத்துல பார்த்ததும் கிர்ருனு ஆயிடுச்சி.   பாண்டிய ராஜன்  ஏதோ நம்ம சொந்த அண்ணாத்தை மாதிரி ரொம்ப சாதாரணமா நடந்து போறதை பார்த்து ஒரே ஆச்சர்யம்இளையராஜா நடந்து போகும் போது ஏதோ ஒரு சாமியார் போற மாதிரி அவ்வளவு அமைதிசிவக்குமார், சாருஹாசன் எல்லாம் வராங்கரேகாவை பார்த்து பொளந்த வாய் மூடவே இல்லைஅவ்வளவு அழகு அவங்க

சிவாஜி வரமாட்டார்னு பேசிக்கிட்டாங்க. நம்ம சிவாஜி ரசிகர் 'எங்கே நிம்மதி' சிவாஜி மாதிரியே ஆயிட்டாரு. கமலும், ரஜினியும் இன்னும் வரலேகடைசியிலே ரஜினி கூட வந்துட்டாரு.  சிம்பிளா கருப்பு ஜீன்ஸ், கோடு போட்ட சட்டையில ஸ்டைலா வேகமா நடந்து வந்தாரு. நம்ம ரஜினி ரசிகர், திருப்பதி பெருமாளை கிட்டக்க பார்த்த பரவசத்துலே சிலையா நின்னுட்டாருகன்னத்துல மட்டும் போட்டுக்கலேகமல் கடைசி வரைக்கும் வரவே இல்லேநம்ம கமல் ரசிகர் அப்படியே கான்சர் வந்த வாழ்வே மாயம்  கமல் மாதிரியே ஒரு பொசிஷன்ல போய் நின்னுட்டாரு.

பூஜை அமர்களமா ஆரம்பிச்சு நடந்து முடிஞ்சுதுகாமெரா நம்ம கையில இருந்ததுனால, கண்ணு பாக்குற அத்தனையும் சும்மா டிக் டிக் டிக் கமல் பீலிங்குல அடிச்சு தள்ளிக்கிட்டு இருந்தேன்திடீர்னு நம்ம ரஜினி ரசிகர் சுய நினைவுக்கு வந்து, "டேய், தலைவரோட போட்டோ எடுக்கனும்டாசும்மா வேஸ்ட் பண்ணிட்டியே" அப்படீன்னு கொதிச்சு போய் , எத்தனை எடுத்து இருக்கேன் இன்னும் எத்தனை பாக்கின்னு ஆடிட் பண்ண ஆரம்பிச்சிட்டாருஆனா நான் அதுக்கு முன்னாடியே ஒரு 25 போட்டோ காலி  பண்ணி அடுத்த ஷாட் என்னன்னு ஒரு கலை தாகத்தோட காத்து கிடந்தேன்கமல் வரலேன்னதும் கமல் ரசிகரோட சோலோ ஷாட் மிச்சம் அப்படீன்னு கணக்கு போட்டு நம்ம ரஜினி ரசிகரு, தயங்கி தயங்கி, ஸ்டைலா தம் அடிச்சுக்கிட்டு இருந்த ரஜினிக்கிட்ட போய் போட்டோ எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டாருஎல்லாருக்கும் ஒரே பரவசம்போய் ரஜினி பக்கத்துல நின்னுகிட்டாங்க

நான் அப்படியே போட்டோ எடுக்குற நம்மளை யாரோ போட்டோ எடுக்கற கணக்கா பயங்கர ஸ்டைலா எல்லாம் நின்னுகிட்டு வியு பைண்டர்ல, அப்படி பாக்குறேன், இப்படி பாக்குறேன், 120 டிகிரில வச்சு பாக்குறேன்.  "நம்மளை பாலச்சந்தர், SPM கூட இப்படி ஆங்கிள்  வச்சு பார்த்து இருக்க மாட்டாங்கன்னு" நினைச்சு இருப்பாரு ரஜினிநானும் சின்சியரா யாரும் மிஸ் ஆயிடக் கூடாதுன்னு, நீ கொஞ்சம் உள்ள வா, நீ கொஞ்சம் ரைட்ல போ அப்படீன்னு இன்ஸ்டிரக்ஷன்  எல்லாம் குடுத்துகிட்டு இருந்தேன்குரூப்புல நின்னவங்க எல்லாம் கடுப்பாயி, “டேய் சீக்கிரம் எடுடா” அப்படீன்னு பல்லை கடிச்சுக்கிட்டே திட்ட ஆரம்பிச்சுட்டாங்கஅப்போ தான் ரஜினியை போட்டோ எடுக்கறோம்னு எனக்கு உறைச்சுதுகை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சு, சும்மா நச்சு நச்சுன்னு, எடுத்தேன் பாருங்க போட்டோ, கமல் என்னை அப்போ பார்த்து இருந்தாருன்னா, "ச்சே, இவன் ஸ்டைலை நாம முன்னாடியே பார்த்து இருந்தா அப்படியே டிக் டிக் டிக் பாலோ பண்ணி இருக்கலாமேன்னு" நினைச்சு இருப்பாரு.

எல்லாம் முடிஞ்சு, ரஜினி கிட்ட வழிஞ்சு, போடோகிராப்புக்கு அப்புறம் ஆட்டோகிராப் எல்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தோம்ரஜினி ரசிகரு வீடு வரைக்கும் பேய் அரஞ்சாப் போல வந்தாருசிவாஜி ரசிகருக்கும், கமல் ரசிகருக்கும் அவங்க அவங்க பீலிங்க்ஸ்பொண்ணுங்க எல்லாம், "அப்பாடா, இவனுங்களோட வந்த இந்த டிரிப் எந்த வில்லங்கமும் இல்லாம முடிஞ்சுதேன்னு" எல்லா மதத்தோட தெய்வத்துக்க்கும் நன்றி சொல்லிகிட்டே வந்தாங்க

பிலிம் ரோலை லேப்ல குடுத்து டெவெலப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற பொறுப்பை ரஜினி ரசிகர் ஏத்துக்கிட்டாறுமறு நாளு எங்க மீட்டிங் இடமான எங்க டீச்சர் வீட்டுக்கு எல்லோரும் போட்டோவை பார்க்க போனோம்ரஜினி ரசிகர் போட்டோவை வாங்கிட்டு அங்க வந்தாரு. முகத்துல நட்பே இல்ல. அது போட்டவை பார்த்ததும் தான் தெரிஞ்சுதுஅந்த காலத்துல Elpaar Suitings அப்படீன்னு ஒரு விளம்பரம் வரும்அதுல ஆளுங்களோட தலை மட்டும் இருக்காது. கழுத்து வரைக்கும் கட் பன்னி வெறும் கோட், சூட் தான் இருக்கும்அதே மாதிரி இருந்தது நம்ம போட்டோஸ்ரஜினி இருந்த போட்டோவுல அவர் கூட ஏதோ ஒரு ரெண்டு பேரு இருந்த மாதிரி இருந்ததுரஜினியே உத்து பார்த்தா தான் தெரிஞ்சாருஏன்னா பதட்டத்துல பிளாஷை ஆப் பண்ணிட்டு இருட்டுல படம் எடுத்து இருக்கேன்

தங்களோட கல்யாண போட்டோ காலியாயி இருந்தா கூட பய புள்ளைங்க இவ்வளவு பீல் பண்ணி இருக்காதுங்க. ரஜினியோட இருந்த போட்டோ போச்சேன்னு எல்லாரும் ரொம்ப நாள் என்னை ஜன்ம விரோதி மாதிரியே விலக்கி வச்சாங்க. அப்புறம் ஒரு வழியா நமக்கு பொது மன்னிப்பு குடுத்தாங்க. 


ரஜினி ரசிகர் மட்டும் ரொம்ப நாளு, ஒரு கவுண்டமணி படத்துலே கிழவி ஒன்னு "போச்சே, போச்சே" ன்னு அந்தமாவோட பாடி ஒன்னு கிணத்துல விழுந்ததுக்கு புலம்பிக்கிட்டு இருக்குமே, அதே மாதிரி புலம்பிக்கிட்டு இருந்தாரு. கொஞ்ச நாளு அவரை கவனிக்காம விட்டு இருந்தா, உச்சந்தலையில  கைய வச்சுக்கிட்டு, ...ங்க...ங்க...ங்க...ங்க... ன்னு திரிஞ்சிக்கிட்டு இருந்து இருப்பாரு. நல்ல வேளை அப்படி ஏதும் ஆகலை.

என்னா செய்யறது, விதி வலியது!