Friday, January 6, 2012

ஜில் ஜில் ஜிகர்தண்டா ...

கொஞ்ச நாளைக்கு முன்னால, நானும் என் நண்பர் ஒருத்தரும், சும்மா எங்கேயாவது சுத்திட்டு வரலாம் அப்படீன்னு பிளான் எல்லாம் பண்ணாம கிளம்பினோம்.  நண்பர் இருக்கறது சேலத்துல. அங்கே இருந்து பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கிட்டு, எங்கே போலாம்னு யோசிச்சு, சரி மதுரைக்கு மொதல்ல போயிட்டு அங்க இருந்து அடுத்த கட்ட பயணத்தை யோசிப்போம்ன்னு ஒரு வழியா முடிவு பண்ணி, மதுரை பஸ்ல ஏறி பயணத்தை துவக்கினோம்.

மதுரை வந்து சேர்ந்தப்போ நைட்டு மணி 8 . அங்கே இருந்து மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்து, கன்னியாகுமரி போவோம்னு முடிவு செஞ்சோம். பஸ்சுக்கு காத்துக்கிட்டு இருக்கையில, நமக்கு பக்கத்துலேயே, மதுரை பேமஸ் ஜில் ஜில் ஜிகர்தண்டா கடை ஒன்னு இருந்துச்சு.  மதுரை வந்து ஜிகர்தண்டாவை குடிக்காம போனா ஜென்ம சாபல்யம் கிடைக்குமா?  ஜிகர்தண்டாவை செய்யும் போதே நாக்குல மட்டும் இல்ல, உடம்பு பூராவும் ஜொள்ளு ஊருதுன்னா மிகை இல்லை.

முதல்ல ரோஸ் சிரப், அப்புறம் கொஞ்சம் கடல் பாசி போடுறாங்க.



அப்புறம், கொஞ்சம் பால், சக்கரை எல்லாம் போட்டு ஒரு மிக்சிங்.



அதுக்கு மேல வனிலா ஐஸ் கிரீம் டாப்பிங்.

ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.   


ஸ்பூன்ல ஐஸ் கிரீம், பாசியை மிக்ஸ் பண்ணி எடுத்து வாயில போட்டு,  கொஞ்சம் கொஞ்சமா அது தொண்டைக்கு உள்ள கரையும் போது, அடேங்கப்பா....   

யாரு இப்படி ஒரு அட்டகாசமான காம்பினேஷன் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல.  அபாரம்.  ஒரு பழைய காப்பி விளம்பரத்துல தேங்காய் சீனிவாசன், மனோரமா கிட்ட காப்பி செய்யற விதத்தை ரசிச்சு சொல்லிட்டு கடைசியில, "தேவாம்ருதமா இருக்கும்டி" அப்படீன்னு முடிப்பாரு.  ஜிகர்தண்டாவும் அப்படி ஒரு தேவாம்ருதம் தாங்க. மதுரைக்கு போனா நீங்க ஜிகர்தண்டாவை குடிச்சிட்டு தான் அடுத்த வேலை பார்க்கணும்.

ஜிகர்தண்டாவை ஒரு 'கட்டிங்' போட்டுட்டு, கன்னியாகுமரி பஸ் ஏறி உக்காந்ததும், ஜன்னல் ஓர ஜில் காத்து, வயித்துக்குள்ள ஜிகர்தண்டா ஜில் எல்லாம் சேர்ந்து, ஆனந்தமான தூக்கம்.

அப்படியே கன்னியாகுமரி, நாகர்கோவில் பத்மநாபபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திரும்பவும் மதுரை மார்கமா 'ஒரு மார்கமா' வந்து சேர்ந்தோம்.  அதை பத்தி எல்லாம் அப்புறம் சொல்றேன்.





No comments:

Post a Comment