Tuesday, January 24, 2012

ஒரு அரைகிழ அம்மணியின் Flashback....



வள்ளி படத்து கதையை எழுதினவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிஒரு பெண் எப்படி வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்ளனும்னு  அவர் மனசுல விழுந்த ஒரு புள்ளியை ரொம்ப நாள் அசைப்போட்டு, ஒரு கதையா உருவாக்குனதா ஒரு முறை சொன்னாருஅதே மாதிரி நானும்,  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த மாதிரி சில விஷயங்கள் நடந்தால்... அப்படீன்னு  நினைச்சு நான் உருவாக்குன கதை தான் இப்போ நீங்க படிக்க போறீங்க.   இது ஏற்கனவே வந்த ஒரு படத்து கதை போல இருக்கேன்னு நீங்க பீல் பண்ணா அது தற்செயல் தான்.


கதைய படிச்சுட்டு, நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு, படம் எடுக்கறேன்னு இயக்குனர்கள்தயாரிப்பாளர்கள் எல்லாம் சண்டை போட்டுக்க வேணாம்திறமை உள்ளவங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு உண்டு.

இந்த கதை, ஒரு பெண், டைட்டானிக் (கிழ) ஹீரோயின் மாதிரி, அவங்க அரை கிழம் ஆன பின்னால தன் வாழ்க்கையை திரும்பி பாக்குற மாதிரி பிளாஷ்பேக்கொசுவத்தி சுருளை காமிரா முன்னாடி ஸ்லோவா சுத்தி விடுங்க. இனிமே வர்றது எல்லாம் அந்த அரை கிழ அம்மணியோட வார்த்தைகள் தான்.

"கோயம்பேடு பஸ் ஸ்டாப்புல உக்காந்துக்கிட்டு இருக்கேன்வாழ்க்கையில, பல சிக்கல்கள், ஏமாற்றங்கள் எல்லாம் கடந்து, எனக்கும் ஒரு வழியா என் 45 வயசுல ஒரு நாதாரியோட கல்யாணம் நடக்க போகுதுவேற வழி இல்லே. இவனையும் விட்டா நான் கடைசி காலத்துல யாரும் கவனிக்காம விட்ட நசுங்கி போன சொம்பு மாதிரி ஆயிடுவேன்அதான் அமுக்கி போட்டுட்டேன்

இப்போ என் கல்யாண invitation  குடுக்கத்தான் நான் ஒன்னாங்கிளாஸ் படிச்ச ஸ்கூல் இருக்குற ஊரு, பத்தாம் கிளாஸ் படிச்ச பக்கத்து ஊரு, காலேஜ் படிச்ச பக்கத்து ஸ்டேட் எல்லாம் போய், அங்க நாம ரூட்டு போட்டு சிக்காதவனுங்க, சிக்குனாலும் எஸ்கேப் ஆனவுங்க எல்லாரையும் என்னோட கல்யாணத்துக்கு அழைக்க போறேன்.

முதல்ல எங்க ஊருபஸ்சுல இருந்து இறங்கி ஊருல கால் வச்ச உடனே, பையை தொறந்து கண்ணாடி எடுத்து மாட்டிகிட்டேன். பட்டைய கிளப்புற வெயில். புழுதி பறக்குது.  ஆனா கூட எங்க இருந்தோ நம்ம மேல தென்றல் வீசுற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு மூச்சை  ஒரு தடவை ஆழமா இழுத்து விடுறேன்ஒரு பீல் வரணும் இல்லையா.  இப்போ ஆம்பிளைங்க கோரசா "ஆ... ஆஆஆ" ன்னு BGM .  

ஊரு எல்லையிலேயே ஒருத்தன் என்னை பார்த்து பரிதாப்பட்டு, "அம்மா வாங்க TVS 50 இல உங்களை கூட்டிக்கிட்டு போறேன்னான். நான் வேணாம்னு சொல்லிட்டு,   மெதுவா நடக்க ஆரம்பிச்சேன்.  'நெஞ்சம் மறப்பதில்லை....." அப்படீன்னு சுசீலா அம்மாவோட பாட்டு வேற காத்துல மிதந்து வருதுஒரே பீலிங்க்ஸ் தான்.

மொதல்ல நான் Invitation குடுக்க போனது என்னோட ஒன்னாங்கிளாஸ் படிச்ச நாராயணன் வீட்டுக்குஇவன் தான் என் மனசுலே மொதல்லே காதல் என்ற அந்த அற்புதமான பீலிங்கை எனக்கு அஞ்சு வயசுலேயே ஏற்படுத்தினவன்இவங்க வீட்டுல கொருகலிக்கா மரம் இருக்கும். தினமும் கொருகலிக்கா பறிச்சுக்கிட்டு வந்து எனக்கு குடுப்பான்மத்தவங்களுக்கு ஒரு காய் குடுத்தான்னா, எனக்கு மட்டும் ரெண்டு குடுப்பான்அப்பவே என்னை அவன் லவ் பண்றான்னு புரிஞ்சிக்கிட்டேன்ஒரு நாள் மெதுவா நானே அவன் கிட்டே 'ப்ரொபோஸ்' பண்ணேன்பயபுள்ள முடியாதுன்னு சொல்லி இருக்கலாம், அதை விட்டுட்டு நேரா டீச்சர் கிட்ட போய், "டீச்சர், இவ என்னை பார்த்து லவ் யூ ன்னு சொல்றா டீச்சர் ன்னு போட்டு குடுத்துட்டான்அன்னைக்கு டீச்சர் பிரம்பை எடுத்து என்னை பட்டக்ஸ்லேயே வெளு வெளு ன்னு வெளுத்துட்டாங்க. அன்னைக்கே அந்த பிஞ்சு காதல் பிஞ்சி போச்சு.

இப்போ கொசுவத்தி ரிவர்ஸ்ல சுத்தணும்நேரா அவன் வீட்டுக்கு முன்னாடி போய் நின்னேன். சப்பிப் போட்ட மாங்கொட்டை தலையா ஒரு பெரியவரு வீட்டுல இருந்து வெளிய போய்க்கிட்டு இருந்தாரு.  

"இங்க நாராயணன்னு....." 

"நான் தான்.....நீங்க?".

"என்னை ஞாபகம் இல்லை? உன்கூட ஒன்னாங்கிளாஸ் படிச்சேனே!" 

"நீ.... அஞ்சலை தானே?"  அப்படீன்னு என் பழைய பேர ஞாபகப்படுத்திச்சு அந்த மாங்கொட்டைநான் இப்போ என் பேர இங்கிலீஷ்ல ஒரு எழுத்தை கட் பண்ணி, ஸ்டைலா அஞ்சலின்னு மாத்தி வச்சுருக்கேன்னு அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லேஅப்போ பார்த்து உள்ள இருந்து ஒரு 18 வயசு பொண்ணு வெளிய வந்து, "யாருப்பா இது?" அப்படீன்னு கேக்க, இந்த நாரவாயி நாராயணன், "கண்ணு இது என்கூட ஒண்ணாப்புலே இருந்து படிச்சது." அப்படீன்னு ஆரம்பிச்சு பழசை எல்லாம் சொல்றேன்னு, நான் வகுப்புல பாவாடையில ஒன்னுக்கு போனதுல இருந்து, இந்த நாய் கிட்ட  லவ் யூ சொல்லி பட்டக்ஸ்லே அடி வாங்குனவரைக்கும் விலாவாரியா அள்ளி விட்டுக்கிட்டு இருக்கான்அப்புறம் அவன் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு வேற சொன்னான் பாருங்கவாழ்கையே வெறுத்துப் போயிட்டேன்எல்லாத்தையும் சொல்லிட்டு, "ரொம்ப நாளு கழிச்சு ஊருக்கு வந்து இருக்கியே என்னா விஷயம்"னு கேக்கறான்

பையில இருந்து invitation எடுத்தேன்அதுக்குள்ள அந்த அவசரத்துக்கு பொறந்த அரை வேக்காடு, "அடடே, கல்யாணமா? உன் பொண்ணுக்கா, பையனுக்கான்னு?" கேக்குறான். அவனுக்காக என் வாழ்க்கை வரலாறை கொஞ்சம் சோகம் பிழிய டகால்ட்டி திரைக்கதை விட்டுஅதனால தான் கல்யாணம் லேட்னு சொல்லி, "கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும்னு" Invitation குடுத்தேன்

நாராயணன் அதை வாங்கும் போது, அவன் முகத்துல தெரிஞ்சுது குசும்பா, இல்லை யாரு அந்த துரதிர்ஷ்டசாலி அப்படீன்னு காமிச்ச பீலிங்கான்னு எனக்கு புரியலை. Invitation ஐ வாங்கிக்கிட்டு முதல் மரியாதை சிவாஜி, வயசான ராதாவை பாக்குற மாதிரி ஒரு பீலிங்கோட என்னை பார்த்து, "கண்டிப்பா வரேன் அஞ்சலை" ன்னு மறக்காம என் பழைய பேர, பேஸ் வாய்ஸ்ல சொல்றான் அந்த வெந்த மண்டையன்.

அடுத்து என்கூட பத்தாம் கிளாஸ் படிச்ச குமரேசன் வீட்டுக்கு, மேல வானத்தை பார்த்துக்கிட்டே பீலிங்கோட வாக்கிங்....... இப்போ மறுபடியும் ஆம்பிளைங்க கோரசா  "ஆ....ஆஆஆ" ன்னு பேக் கிரவுண்டுல கொட்டாவி விடுற மாதிரி BGM....

அங்க "நடந்தது என்ன?" ........ அடுத்த பதிவுல....

Friday, January 6, 2012

ஜில் ஜில் ஜிகர்தண்டா ...

கொஞ்ச நாளைக்கு முன்னால, நானும் என் நண்பர் ஒருத்தரும், சும்மா எங்கேயாவது சுத்திட்டு வரலாம் அப்படீன்னு பிளான் எல்லாம் பண்ணாம கிளம்பினோம்.  நண்பர் இருக்கறது சேலத்துல. அங்கே இருந்து பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கிட்டு, எங்கே போலாம்னு யோசிச்சு, சரி மதுரைக்கு மொதல்ல போயிட்டு அங்க இருந்து அடுத்த கட்ட பயணத்தை யோசிப்போம்ன்னு ஒரு வழியா முடிவு பண்ணி, மதுரை பஸ்ல ஏறி பயணத்தை துவக்கினோம்.

மதுரை வந்து சேர்ந்தப்போ நைட்டு மணி 8 . அங்கே இருந்து மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்து, கன்னியாகுமரி போவோம்னு முடிவு செஞ்சோம். பஸ்சுக்கு காத்துக்கிட்டு இருக்கையில, நமக்கு பக்கத்துலேயே, மதுரை பேமஸ் ஜில் ஜில் ஜிகர்தண்டா கடை ஒன்னு இருந்துச்சு.  மதுரை வந்து ஜிகர்தண்டாவை குடிக்காம போனா ஜென்ம சாபல்யம் கிடைக்குமா?  ஜிகர்தண்டாவை செய்யும் போதே நாக்குல மட்டும் இல்ல, உடம்பு பூராவும் ஜொள்ளு ஊருதுன்னா மிகை இல்லை.

முதல்ல ரோஸ் சிரப், அப்புறம் கொஞ்சம் கடல் பாசி போடுறாங்க.



அப்புறம், கொஞ்சம் பால், சக்கரை எல்லாம் போட்டு ஒரு மிக்சிங்.



அதுக்கு மேல வனிலா ஐஸ் கிரீம் டாப்பிங்.

ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.   


ஸ்பூன்ல ஐஸ் கிரீம், பாசியை மிக்ஸ் பண்ணி எடுத்து வாயில போட்டு,  கொஞ்சம் கொஞ்சமா அது தொண்டைக்கு உள்ள கரையும் போது, அடேங்கப்பா....   

யாரு இப்படி ஒரு அட்டகாசமான காம்பினேஷன் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல.  அபாரம்.  ஒரு பழைய காப்பி விளம்பரத்துல தேங்காய் சீனிவாசன், மனோரமா கிட்ட காப்பி செய்யற விதத்தை ரசிச்சு சொல்லிட்டு கடைசியில, "தேவாம்ருதமா இருக்கும்டி" அப்படீன்னு முடிப்பாரு.  ஜிகர்தண்டாவும் அப்படி ஒரு தேவாம்ருதம் தாங்க. மதுரைக்கு போனா நீங்க ஜிகர்தண்டாவை குடிச்சிட்டு தான் அடுத்த வேலை பார்க்கணும்.

ஜிகர்தண்டாவை ஒரு 'கட்டிங்' போட்டுட்டு, கன்னியாகுமரி பஸ் ஏறி உக்காந்ததும், ஜன்னல் ஓர ஜில் காத்து, வயித்துக்குள்ள ஜிகர்தண்டா ஜில் எல்லாம் சேர்ந்து, ஆனந்தமான தூக்கம்.

அப்படியே கன்னியாகுமரி, நாகர்கோவில் பத்மநாபபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திரும்பவும் மதுரை மார்கமா 'ஒரு மார்கமா' வந்து சேர்ந்தோம்.  அதை பத்தி எல்லாம் அப்புறம் சொல்றேன்.